திமுகா ஆர் எஸ்பாரதி சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இன்று நிதிபதியாகவுள்ள அனைவரும் திமுகா ஆட்சியில் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.
இந்த கண்டனத்துக்குரிய பேச்சிக்கு அவர் அன்றே கைது செய்துஇருக்க வேண்டும் என் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை ?
இருந்தாலும் கைது செய்ததற்கு மத்திய குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கைக்கு நமது பாராட்டு!
இந்த ஆர் எஸ் பாரதி மட்டும் இல்லை இன்று பெரும்பாலும் திமுகாவில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொரு இடத்திலும் சட்டத்தையும் அரசு அதிகாரிகளையும் தரம் தாழ்த்தி பேசிவிட்டு அவர்கள் இவர்களை 3-ஆம் தரம் நபர்களாக நடத்துவதாக புகார்கூறி வருகின்றனர்.
அதில் சில
1 ஆர் எஸ் பாரதி விவகாரம்.
2 விழுப்புரத்தில் பொன்முடி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
3 கரூரில் கட்சிவிட்டு கட்சி சென்ற செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
4. டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஒரு படிக்கு மேலே பொய் தலைமை செயலகத்திற்கு சென்று அதாவது அரசு பணியில் இருக்கும் தலைமை அதிகாரியை மிரட்டிவிட்டு வெளியே வந்து தாழ்த்த பட்ட மக்களைப்போல் எங்களை நடத்துகின்றனர் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட 3 ஆம் தரம் மனிதர்களா என்று அவர்களின் வாயிலே தாழ்த்த பட்ட மக்களின் நிலையை விவரிக்கும் வகையில் செய்திவெளியிடுகின்றார்.
இந்த நிகழ்வுகள் தற்போது கொரான நேரத்தில் நடந்தவை மட்டுமே!
இது போன்று ஆட்சியில் இல்லாத போதே இவர்களின் அராஜகம் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்களை ஆட்சியில் தப்பி தவறி அமரவைத்தால் தமிழ்நாடு ஒரு திருட்டு கூடாரமாகவும் கட்டப்பஞ்சாயத்து நகரமாகவும் மாறிவிடும். மக்கள் இனிவரும் காலங்களில் புதிய தலைவர்களின் வருகையை ஆதரிக்கவேண்டும் மற்றும் பல சுயேட்சைகளை ஆதரிக்கவேண்டும் இதுவே நாம் தமிழ் நாட்டை நாம் காப்பற்ற முடியும்.
எழுத்து
வேலூர்