கழகப் பொதுச்செயலாளர்
#மக்கள்செல்வர் அவர்களின்
#அறிக்கை
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை 50% மானியத்தில் வழங்குவதற்கும்,விவசாயத்திற்கான மின்சாரத்தை (3 Phase) 12 மணி நேரமாவது அளித்திடவும்,விவசாயிகளுக்கான கடனுதவிகளை
வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குவதற்கும் தமிழக அரசு அறிவுறுத்திட வேண்டும்
மறுபதிவு
D.M.R.ரமேஷ் B.E
வேலூர் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர்
வேலூர் மாநகரம்
No comments:
Post a Comment